குஞ்சுகளைக்
கண்டஞ்சும்
கோழிகள்
ஒன்றும்
அறியாமல்
வழிதடுமாறிவிடும்
கழுகுகளின்
பார்வையில் விழுந்து
கதை
முடிந்துவிடும்
ஆனாலும்
நடைபழகுவது
தனியே
இருப்பது
போராடுவது
எல்லாம்
குஞ்சுக்கும்
தெரியவேண்டும்
அதற்குத்
தனியே போயாக வேண்டும்
குஞ்சுகளைக்
கண்டஞ்சும் கோழிகள்
குஞ்சுகளாயிருந்தவைதான்
அதற்கும்
முன்
முட்டைக்குள்
முடங்கியவை
ஓட்டை
உடைத்ததும்
உலகின்
ஒளியில்
கண்கூசியதே
கோழிகள்
அறியும்
ஆனாலும்
காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன்குஞ்சு
கோழிக்கும்
தெரியாது
குஞ்சுகளும்
அறியாது
குஞ்சு
எப்போது
கோழியாகிறது?