Tuesday, 7 August 2012


விஷ பூமியில் புத்தர் சிரித்தார்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து..
புத்தரின் கையில் ஆயுதங்கள் கொடுத்து
அரச அதிகாரம் கைப்பற்ற
இரண்டாயிரம் வருடங்கள் முன்
தேராவாதமும், மஹாயானமும்
இன்னும் இன்னும் எத்தனையோ
புத்தரின் பெயரால்
மோதிக்கொண்ட
அதே இலங்கையில்…
 
புத்தர் வெளியேறிவிட்டார்
அப்போதே
அரியாசனங்களிலிருந்து..
அவர் பிறந்த இந்தியாவில்
தேடியும் காணவில்லை
புத்தரை
இரண்டாயிரம் வருடங்களாக.

அவர்
காந்தியாக பிறந்திருக்கக் கூடும்.
வரையும் விட்டுவைக்கவில்லை..கடைசிவரை. 
இன்னொரு புத்தர்
பிறப்பாரென்று எதிர்பார்க்கவில்லை
யாரும்.
பிறந்தும்
என்ன செய்துவிடுவார்?
அவரைவிட பெரிய தலைவர்கள் இருக்கையில்..


Monday, 2 July 2012




பறவைக்கான சிறகுகள்முளைக்க வேண்டுமெனத்தானே
மெனக்கெடுகின்றனர்
தாய்களும் தந்தைகளும்
எப்போதுதான் பெரியவராகிக்
கடமைகள் ஓயுமோ எனச் சலிக்கையிலும்
நோயில் கலங்கிடினும்,
சிறகு முளைத்துப் பறவை பறக்கையில்
நெஞ்சில் எழுந்து
தொண்டை அடைக்கும்
அது என்ன?
.................................................................................


சிற்றில்லில்அதிகாரத்துடன் நடமாடிய
பேரிளம் பெண்
நினைவு மறந்து
பெயரும் மறந்து
திரிந்து போனது
எவ்வினை?
,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,


எங்கிருந்தும் வந்திருப்போம்
எவ்விடத்தும் குடியிருப்போம்
முன்னாலே வந்தவர்க்கும்
பின்னாளில் வந்தவர்க்கும்
எந்நாளும் எப்போதும்
மறுப்பில்லை
எந்நிறமும் கொண்டிருப்போம்
எம்மொழியும் பேசிடுவோம்
எக்கடவுள் எந்தமதம்
எந்தயிடம் என்றெல்லாம்
கேட்டாலும் தெரிந்தாலும்
எல்லாம் பெயர்களே
என்றிருப்போம்


Saturday, 5 May 2012

VAMAN II

Vaman II

Thunderous steps that cause earth vibrate,
Murderous anger in his eyes,
There comes the Vaman, the dwarf
He is the genie inside the lamp of alladin
Scratch his head and he becomes mightiest colossus
Remember “Sambhavami Yuge yuge”,
He will bring down the kingdom of evil
He will take on the slaves of devil
Of course, that will be Krishnavatar

These are the stories we have been hearing for too long
Gods have come and gone
God has decided that nine avatars are enough
Tenth is not worth of the human that dwell on earth

Thus decided the Vaman
If order cannot be changed
Bring disorder and then dawns the order
This is the time for fights, battles and wars
Mahabharat 

Krubachari and Dronochari
We do not know where they are
Krishna and Bheema hide behind
Egging on the soldiers to fight
Everyone is searching for Aswathama
And Abhimanyu
Lots of noises,
Cacophony, roars but hardly any fight,
Pandavas and Kauravas
Have reached an understanding

‘Thousands of Mahabharats may be staged
But real fights, we won’t have
Why should we die for people who don’t care
We will play the game and charge them the fare’
So goes the MOU

Vaman has to come
He is dwarf, he does not have the power of the king
There are no Solders or clerks
Elephants or Horses
But he has a voice like an ocean,
That dominates all the sounds
Of the TV channels, politicians Rhetorics’
And what not
He comes like waves
He engulfs everything
Rewrites the Histories on the shores
He has two faces one for royalty
And the other for loyalty

He will dupe the Pandavas and Kauravas
Break the MOU and save me and you
Morality is like water
It changes
As per the Sand and Salt
He will follow this law

He will be born among us
The perfect model of immorality
With lizard like mouth and
A trait like blizzard

No, we do not need a Mahatma
We need a monster,
Either in the name of god the pious and pure
Or in the name of the devil on the buffalos.

Monday, 23 April 2012

நிறைவு பெறாத கவிதை

ஒவ்வொரு நாளும் எழுதி எழுதி
ஓயவில்லை கைகள்
ஒவ்வொரு முறையும் திருத்தி
உயிர் பெறவில்லை கவிதை
எண்ணத்திற்கும் விரல்களுக்குமான
போட்டியில்
நடுவராக வந்து நிற்கும்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று
நிறுத்திவிடும் நினைவை
இன்றைக்கான கனவை
நாளைக்காக ஒத்திப் போட்டால்
நாளை தூங்குவதென்ன நிச்சயம்?

வீட்டுக் குருவிகளைத் தேடிக்
காண முடியாத இந்நாட்களில்
கனவுகளைத் தேடுவது எங்கே?



















           





















  







 

வேண்டிய வேண்டியாங்கு





எப்போதும் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்என் மகளுக்குச்
சொல்லவேண்டியதையும்,
வேண்டாததையும்
அவளும் தேடிக் கொண்டிருக்கிறாள்
எனக்குச் சொல்ல வேண்டியதையும்
வேண்டாததையும்
ஒரே நேரத்தில்
வேண்டியவர்களாயும்
வேண்டாதவர்களாயும்

Sunday, 18 March 2012

ஒளிந்த விளக்கு
புயல்பல வந்த போதும் புதைத்துவைத் திருந்த மோகம்
துயர்பல வந்த போது துணையென நின்ற தாகம்
அயர்வுறும் போது வந்து அணைத்ததே கவிதை; இன்று
உயர்வுறத் தாளெ டுத்தால் உடன்வர மறுத்த தேனோ?

எத்தனை காத லோடு என்னிடம் வந்த உன்னை
இத்தனை நாள்ம றந்தேன் என்பதால் சினம்கொண் டாயா?
நித்தமும் நாட கங்கள் நிகழ்த்துவோம் கவிதைத் தேவே
தத்தியே னும்நீ வாவா தனைமறந் தழைக்கி றேனே

வரண்டஎன் மனப்பா லைக்குள் வாறுகால் தோண்டி நீவா
இருண்டஎன் கனவுச் சோலை எழுகிற ஒளியின் தேவா
திரண்டெழும் உன்வே கத்தில் திளைத்துநான் நீந்து வேனே
இரண்டொரு நூறு நுற்கள் எழுதுவேன் எழுது வேனே

வசதிகள் வந்த போதும், மனமதை ஏற்ப தில்லை
தசைகளில் மனதில் எங்கும் தமிழ்தமிழ் என்றே ஓசை
திசைகளும் வாழ்த்தும் வண்ணம் தீங்கதை காவி யங்கள்
இசைபட வாழ்வ தற்கே எழுகயென் மனதின் கண்ணே

ஆடிய வேஷ மெல்லாம் அடுத்தவர்க் காகத் தானே
நீடிய கனவை எந்தன் நெஞ்சிலே ஒளித்து வைத்தேன்
வாடிய பயிரைக் கண்ட வள்ளலைப் போல என்னைத்
தேடியே வருவாய் கண்ணே தெய்வமே தமிழே நீயே



Tuesday, 28 February 2012

சிறுதொகை

வெட்கப்பட வேண்டியதிருக்கிறது
நல்லவனாக இருக்க முயல்வது குறித்து
கூச்சப்பட வைக்கிறது
புகழ் தேடும் மனிதர்களின்
நெற்றியில் எழுதப்படும் வார்த்தைகள்
ஒளித்து வைக்கிறது மனம்
குழந்தைத்தனத்தை

வீரர்கள் அரங்கேற்றும்
கோமாளி நாடகங்கள்
அறிஞர்களின் மனங்களில்
விலங்குகள்
நரிகளுக்கு 
வழங்கப்படும் சிறகுகள்
பூமியில் மனிதர்களுக்காக
மிஞ்சுவது எதுவோ?