இருட்டுக்குள்
எங்கோ தலைக்குமேல்
தெரியும் வெளிச்சம்
மிக உயரமாகத் தெரிவது
கிணற்றின் விளிம்புச் சுவர்கள்
யாராவது தண்ணீர் இறைக்கும் போது
அவர்களின் தலை
தண்ணீரும் பாசியும் பூச்சிகளும்
சமமாகத் தெரியும்
மூழ்குவதன் எல்லை
கெட்டித் தரையும்
அதில் விரித்த மண்ணும்
ஒரே பயம் பாம்புகள்
அவை பெரும்பாலும்
கிண்ற்றுக்கு வெளியே
வசிக்கின்றன
எப்போதாவது
தப்பித் தவறி
இறைக்கும் வாளியில்
மேல் சென்று
பரந்த வெளியில்
விழுந்து விடுவதும் உண்டு
மிகவும் அபூர்வமான
அத்தருணத்தில்
உலகம்
எல்லைகளற்றதும்
தானறியாததும்
என்று
வியக்கும் தவளையின்
கண்கள்
No comments:
Post a Comment