Tuesday, 28 February 2012

சிறுதொகை

வெட்கப்பட வேண்டியதிருக்கிறது
நல்லவனாக இருக்க முயல்வது குறித்து
கூச்சப்பட வைக்கிறது
புகழ் தேடும் மனிதர்களின்
நெற்றியில் எழுதப்படும் வார்த்தைகள்
ஒளித்து வைக்கிறது மனம்
குழந்தைத்தனத்தை

வீரர்கள் அரங்கேற்றும்
கோமாளி நாடகங்கள்
அறிஞர்களின் மனங்களில்
விலங்குகள்
நரிகளுக்கு 
வழங்கப்படும் சிறகுகள்
பூமியில் மனிதர்களுக்காக
மிஞ்சுவது எதுவோ?

No comments:

Post a Comment