சிறு கண்ணனைப் போலவே
இந்தப் பூமியைப்
பேரண்டத்தை விழுங்கி
என் உள்ளங்கையில்
உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்
ஒரு கவிஞன் போல,
விஞ்ஞானி போல
சில நேரங்களில்
பூமியாகவோ
பேரண்டமாகவோ
ஆகிவிட விரும்புவதும் உண்டு
ஒரு துறவி போல.
எனக்கு அகங்காரமோ
பேராசையோ
உலகமும் அண்டமும்
உள்ளது உள்ளபடியே
பனித்துளியில் கடல் தெரிந்தாலும்
கடலிலிருந்து வந்ததே
பனித்துளி
No comments:
Post a Comment