Tuesday, 15 December 2015

நாம் யார்க்கும் குடியல்லேம்

எண்ணிலா அண்டம் இயற்கையில் எழுந்த
        இயல்பினை கண்டுபி டித்தோம்
    ஏகன னேகன் என்றெலாம் உரைத்த
        எவரது புளுகைம றுத்தோம்
வெண்ணிலா மீன்கள் செங்கதிர் உலவும்
        வீதியை அளந்துமு டித்தோம்
    விரைகிற செயற்கைக் கோள்களை அனுப்பி
        சனியையும் புகைப்படம் பிடித்தோம்

ஆழ்கடல் இறங்கி திமிங்கலம் சுறாமீன்
        கோரலின் சாரம றிந்தோம்
     ஆப்பிரிக்காவில் மனித குலத்தின்
        ஆரம்ப வாழ்வைப் புரிந்தோம்
பாழுடல் என்று ஒதுக்கிய உடலின்
        பாகமும் வேலையும் குறித்தோம்
     பவித்திர மான கடவுளின் தொண்டர்
        பார்க்கிற வகையில் விரித்தோம்

தத்துவம் என்று பித்தர்கள் பேசும்
        சாரமில் கதைதோற் கடித்தோம்
     தாமுயர் வென்று சாஸ்திரம் காட்டும்
        சழக்கரும் நடுங்கிட விழித்தோம்
மூத்தவர் சொன்ன முறைகளில் அடக்கு
        முறைகளை மூச்சொடெ திர்த்தோம்
    முன்னரோ இன்றொ சொன்னதைக் குறள்போல்
        சான்றுடன் பகுத்த றிந்தோம்

No comments:

Post a Comment