மலைகளிடையே பறக்கும் சிறுகுருவி
பறந்து பறந்தே பழகிவிட்டது
பசித்தால் இரைதெரியும் அதற்கு
கீழிரங்கும் எருமையின் முதுகில்
மீண்டும் மலைகளும்
நதிகளும் வானும்
பெருமலைகளை நோக்கியும்
முகில்களிடை விரைந்து பாய்ந்தும்
நதிகளில் தன் பிம்பம் கண்டும்
அருவித் துளிகளில் தன்னை மறந்தும்,
வெய்யில் எரிப்பில் கிறங்கி விழுந்தும்
தரைக்கு வராமலே இருக்க முனையும்
சும்மா கிட என்று சொல்லும் சொந்தமும்
வா வா என்று அழைக்கும் வானும்
Saturday, 3 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment