Saturday, 3 October 2009

மலைகளிடையே பறக்கும் சிறுகுருவி

பறந்து பறந்தே பழகிவிட்டது



பசித்தால் இரைதெரியும் அதற்கு

கீழிரங்கும் எருமையின் முதுகில்

மீண்டும் மலைகளும்

நதிகளும் வானும்



பெருமலைகளை நோக்கியும்

முகில்களிடை விரைந்து பாய்ந்தும்

நதிகளில் தன் பிம்பம் கண்டும்

அருவித் துளிகளில் தன்னை மறந்தும்,

வெய்யில் எரிப்பில் கிறங்கி விழுந்தும்



தரைக்கு வராமலே இருக்க முனையும்

சும்மா கிட என்று சொல்லும் சொந்தமும்

வா வா என்று அழைக்கும் வானும்

No comments:

Post a Comment