Wednesday, 21 October 2009

எத்தனைமுறை எதிர்த்தடித்தாலும்,


அதே வேகத்தில்

சுவரிலிருந்து வரும் பந்தென,

எனக்காக

வாசலில்

காத்திருக்கும்

தோல்விகள்



எதிர்பார்த்துக் கனவுகள் கண்டு

ஏமாந்திருப்பதில்

வீரன் நான்



வரலாற்றில் உருவமற்ற

தோல்வியுற்றவர்களைப் போலவே

வென்றவர்களும்

வார்த்தைகளாக நின்று விடுகிறார்கள்



யாருக்காகப் எழுதுகிறீர்கள்

கவிதைகளை

உங்கள் சுய சரிதைகளை?

யாருக்காக வைக்கிறீர்கள்

சிலைகளை?

அவை

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

நோயாளியின்

மயக்க உளறல்கள்



பிரபஞ்சத்தில் புள்ளியிலும் சிறிதாக

மறையும் பூமி

அதில் புள்ளியிலும் சிறிதாக





உங்களுடைய அளவுகோல்களையே

உபயோகித்தாலும்

தோல்வியில்தான் முடியும் வாழ்வு

என்றென்றும்



நாம் நினைத்தபடி

வெல்ல முடியாததுதான்

பூமியில் எதுவும்

No comments:

Post a Comment