Tuesday, 10 November 2009

பள்ளி எழுச்சி


சம்பளமாய் வரும்
டாலரில் மூழ்கி
தற்கொலை செய்துகொண்டது
அக்கினிக் குஞ்சு

கிம்பளமாய் வரும்
மில்லியன் டாலரில்
மூச்சு விடுகிறது அரசியல்

கும்பலாய் அலையும்
பரதேசிக் கூட்டம்
கூசி மறைந்து கொள்கிறது
இயலாமையில்

அம்பும் வில்லும்
தெருவோரத்தில் கிடக்கின்றன
துருப்பிடித்து

எம்பெருமானும் தம்மிடம்நீங்கி
நம்மிடம் வருவாரில்லை

யார்தான் பாடுவது
அந்தப் பாடலை?

No comments:

Post a Comment