பள்ளி எழுச்சி
சம்பளமாய் வரும்
டாலரில் மூழ்கி
தற்கொலை செய்துகொண்டது
அக்கினிக் குஞ்சு
கிம்பளமாய் வரும்
மில்லியன் டாலரில்
மூச்சு விடுகிறது அரசியல்
கும்பலாய் அலையும்
பரதேசிக் கூட்டம்
கூசி மறைந்து கொள்கிறது
இயலாமையில்
அம்பும் வில்லும்
தெருவோரத்தில் கிடக்கின்றன
துருப்பிடித்து
எம்பெருமானும் தம்மிடம்நீங்கி
நம்மிடம் வருவாரில்லை
யார்தான் பாடுவது
அந்தப் பாடலை?
Tuesday, 10 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment