Monday, 23 November 2009

மிதிபடும் ஏதோ ஒன்று


சின்னஞ்சிறு காலடிகள்
வைத்தேன்
உறுதியுடன்
புதுப் பாதையை நோக்கி


 சிக்கிச் சிதைந்தது காலடியில்
நான் வளர்த்த சிட்டுக் குருவி

பார்த்திருக்கலாம்
அது நின்றதை


கனவின் பாரத்தில்
கண்களும் இருட்டி விட்டன
வானத்தைப் பிடித்துத்
தொங்க முனைகையில்
கால்களைப் பார்ப்பதில்லை யாரும்

அதனடியில்
கசங்கும்
ஏதேனும் இருக்கக்கூடும்


கீழே மிதித்துத்தான்
எவ்வ வேண்டியிருக்கிறது
எதற்காகவும்…

No comments:

Post a Comment