மிதிபடும் ஏதோ ஒன்று
சின்னஞ்சிறு காலடிகள்
வைத்தேன்
உறுதியுடன்
புதுப் பாதையை நோக்கி
சிக்கிச் சிதைந்தது காலடியில்
நான் வளர்த்த சிட்டுக் குருவி
பார்த்திருக்கலாம்
அது நின்றதை
கனவின் பாரத்தில்
கண்களும் இருட்டி விட்டன
வானத்தைப் பிடித்துத்
தொங்க முனைகையில்
கால்களைப் பார்ப்பதில்லை யாரும்
அதனடியில்
கசங்கும்
ஏதேனும் இருக்கக்கூடும்
கீழே மிதித்துத்தான்
எவ்வ வேண்டியிருக்கிறது
எதற்காகவும்…
Monday, 23 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment