Thursday, 19 November 2009

கனவு வானம்


என்னைச்
செதுக்கிக் கொண்டிருக்கும் போது
செதுக்கியது அலங்கோலமாகி
சிதறல்கள் சிற்பங்களாகி
கை விட்டுப் போனதை
அழகாய் இருப்பதாக
கற்பனை செய்து கொள்கிறது
மனம்

வரைந்து கொண்டிருக்கும்போதே
மறைந்துவிடும்
நீர்ச்சிற்பங்கள்
நிறைவளித்ததாய்
நீயும் நினைத்துக் கொள்

கனவுகள் வானில் தெரிந்தால்தானே
கால்கள் தரையில் நடக்கும்

No comments:

Post a Comment