கனவு வானம்
என்னைச்
செதுக்கிக் கொண்டிருக்கும் போது
செதுக்கியது அலங்கோலமாகி
சிதறல்கள் சிற்பங்களாகி
கை விட்டுப் போனதை
அழகாய் இருப்பதாக
கற்பனை செய்து கொள்கிறது
மனம்
வரைந்து கொண்டிருக்கும்போதே
மறைந்துவிடும்
நீர்ச்சிற்பங்கள்
நிறைவளித்ததாய்
நீயும் நினைத்துக் கொள்
கனவுகள் வானில் தெரிந்தால்தானே
கால்கள் தரையில் நடக்கும்
Thursday, 19 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment