Thursday, 26 November 2009

பழைய முகம்


இந்தத் தெப்பக்குளத்தில்
நீரில் இறங்கி
கைவிரவி அலைஅலையாய்ப்
போகவிட்டு
ஏரிக்குக் கொடுத்த
என் முகம்
இங்கேதான் ஒளிந்திருக்கிறது

காய்ந்துவிட்ட வெடிப்புகளில்
யாரோ என்றோ பதித்த
காலடிச் சுவட்டில்
எதிரொளிக்கும் என்று
காத்திருக்கிறேன்
எடுத்துக் கொள்ள

No comments:

Post a Comment