தகுதி
தனிமையில் கதறும் என் குரல்
யார் காதுகளிலும்
விழுவதில்லை
என்னைப் பார்த்தால் உங்களுக்குத்
தூக்கம் வராமல் போகலாம்
இசைமிகுந்த இரவில்
என் குரல் அவலமானது
நெஞ்சின் ஈரத்தைக் கிளறக்கூடும்
நீங்கள் ஒருபோதும் கண்டிராத
புதிய மிருகம் நான்
இல்லை என்று அறிவிக்கப்பட்ட பிறகு
என்ன பெயரிடுவீர்கள் எனக்கு?
நகரங்களின் அடுக்குமாடி
இடுக்குகளில்
விலைகுறைந்த கள்ள மதுக்கடைகளில்
நெடுஞ்சாலையில்,
பத்திரிக்கைகளில், புத்தகங்களில்
மின்னற் பொழுதில் மறையும்
உருவம் என்னுடையது
உங்கள் மேலான நினைவுகளுக்குத்
தகுதியானதல்ல அது
Monday, 23 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment