Monday, 23 November 2009

தகுதி

தனிமையில் கதறும் என் குரல்
யார் காதுகளிலும்
விழுவதில்லை
என்னைப் பார்த்தால் உங்களுக்குத்
தூக்கம் வராமல் போகலாம்

இசைமிகுந்த இரவில்
என் குரல் அவலமானது
நெஞ்சின் ஈரத்தைக் கிளறக்கூடும்

நீங்கள் ஒருபோதும் கண்டிராத
புதிய மிருகம் நான்
இல்லை என்று அறிவிக்கப்பட்ட பிறகு
என்ன பெயரிடுவீர்கள் எனக்கு?

நகரங்களின் அடுக்குமாடி
இடுக்குகளில்
விலைகுறைந்த கள்ள மதுக்கடைகளில்
நெடுஞ்சாலையில்,
பத்திரிக்கைகளில், புத்தகங்களில்
மின்னற் பொழுதில் மறையும்
உருவம் என்னுடையது

உங்கள் மேலான நினைவுகளுக்குத்
தகுதியானதல்ல அது

No comments:

Post a Comment