Friday, 20 November 2009

வரைந்தவை


தொலைபேசியில்
மணிக்குப் பின் வந்தது
இருபது வருடங்களுக்கு முன்
தொலைந்து போன
குரல்

வாழ்க்கைக் கடலின் மேல்
பாலங்கட்டி,
துயரங்களைத் தாண்டிவரும்
புன்னகை

மீண்டும் மீண்டும்
வரைந்து பார்த்த
மன ஓவியங்களில்
அகப்படுவதில்லை
நிஜம்

No comments:

Post a Comment