ஆசைத் தீயிலே
புள்ளினம் நானெனப் போதையில் மிதக்கிறேன்
புதியதோர் நாடகம் போடநினைக்கிறேன்
கொள்வதில் இலக்கியக் கோடுகள் இணைக்கிறேன்
கூவ நினைக்கையில் குரலை மறக்கிறேன்
பள்ளியில் பயில்கையில் பாடநி னைத்தவன்
பருவம் வந்ததும் பாதை திரும்பினேன்
உள்ளத்தில் உள்ளதை ஒதுக்கி விட்டவன்
உலகத்தின் புயலிலே மாட்டி மயங்கினேன்
பள்ளத்தில் விழுந்து பரிதவிக்கிறேன்
பயணம் மாற நீச்சலைத் துவக்கினேன்
கொள்ளுவோர் கொள்ளலாம் குரைப்பவர் சிரிக்கலாம்
கொப்பளிக்குமென் ஆர்வத்தை ரசிக்கிறேன்
வெள்ளமாய்ப் பெருகிய வேதனை குறையலாம்
வீறு கொண்டெழும் புதிய ஊற்றிலே
அள்ள அள்ளஎன் ஆர்வம் பெருகுதே
ஆசைத் தீயிலே உலகம் ஒளிருதே
Saturday, 8 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment