இருளே இல்லாத…..
இருளைக் கண்டால்
எனக்கு பயம்
அதற்குள் என்ன
இருக்குமோ?
மறக்க முடியாத
கொடூரம்
சகிக்கமுடியாத வன்முறை
நினைக்க விரும்பாத
இழப்பு
மன்னிக்க முடியாத தவறு
இன்னும் எதுவேனும்..
ஒவ்வொரு நாளிலும்,
வாழ்விலும்,
வந்துவிடுகிறது இரவு
ஒவ்வொரு பகலிலும்
நிம்மதியின்றித் தவிக்கிறேன்
இரவை எண்ணி
ஒருபோதும் வெல்ல முடிந்ததில்லை
இருளை
ஒரு முன்னறிவிப்புமின்றி
என் அனைத்தையும் இறுக்கிச்
சூழ்ந்து விடுகிறது
எப்படியோ
விடிந்தும் விடுகிறது பிறகு
Thursday, 27 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
romba nalla irukku iyya.
ReplyDelete