Monday, 17 August 2009

குழந்தை பருவம்

எப்போதும்
புலம்பிக் கொண்டிருக்கும்
நகரத்து வாய்
என் கிராமத்திலே…….என்று

அங்கொன்றும் எனக்கில்லை
நின்று விடும் காலம்
இளமையுடன், என் வறுமையுடன்

பெருநகரத்தின் எறும்புகளுக்கு
ஒரு பருக்கைச் சோறு
கிடைத்துவிடுகிறது
ரொம்ப நெருங்கிலாலொழியக்
கேட்பதில்லை யாரும் ஜாதியை..

ஒரு புதிய குழந்தைப் பருவம் தேடி
தலைதெறிக்கும்
ஓட்டத்தில்,
அழுத்தவில்லை
முதுகிலிருக்கும் பாரம்.

No comments:

Post a Comment