Friday, 14 August 2009

வீடு

சுற்றுச் சுவர்கட்டி,
கண்ணாடி ஜன்னல்கள் வைத்தடைத்து,
அதற்கு மேல் திரைச் சீலைகள் பொருத்தி,
ஏர்-கண்டிஷனர் வைத்துத் தடைசெய்து,
எல்லாம் செய்தும் பயனில்லை.
சிறு இடைவெளி கிடைத்தால் கூட
என் வீட்டில்
எப்படியாவது நுழைந்து விடுகிறது
காற்று
என் அனுமதியின்றி
சிறு துளியாகவேனும் தொட்டுவிடுகிறது
என் உள்ளறையை
இந்த நிலவொளி

பேயாய் அறையும் மின்விசிறியும்,
நூறுவாட்ஸ் ஒளிவிளக்கும்
பிஸ்ஸாவில் கோழியும்,
கோலாவும்
போதும் எனக்கு
இயற்கையினால் என்ன பயன் ?
ஒரு லட்சம் சம்பளமா
கிடைத்துவிடப் போகிறது?

No comments:

Post a Comment