Monday, 17 August 2009

ஒரு நாள்

ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
அந்த வீட்டுத் தோட்டத்தின்
மல்லிகைப் பூக்களைத்
தொடுத்திருப்பேன்
எத்தனையோ எழுத மறந்த கவிதைகளை
காற்றில் எழுதுவேன் அப்போது

பஸ்ஸில் இடிபட்டு விழுந்து
வாயில் தார் பூசியதை
மறந்து குளிப்பேன்
நீரோடையில்
மெல்லவரும் தென்றலில்
மயிர் சிலிர்ப்பேன்

என் மருத்துவர் இன்னொரு முறை
அழைக்காத பொழுது
என் பேத்திக்கு அல்லது
அவள் மகளுக்கு
துணைஒன்று
கிடைத்த பொழுது

ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு

No comments:

Post a Comment