ஒரு நாள்
ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
அந்த வீட்டுத் தோட்டத்தின்
மல்லிகைப் பூக்களைத்
தொடுத்திருப்பேன்
எத்தனையோ எழுத மறந்த கவிதைகளை
காற்றில் எழுதுவேன் அப்போது
பஸ்ஸில் இடிபட்டு விழுந்து
வாயில் தார் பூசியதை
மறந்து குளிப்பேன்
நீரோடையில்
மெல்லவரும் தென்றலில்
மயிர் சிலிர்ப்பேன்
என் மருத்துவர் இன்னொரு முறை
அழைக்காத பொழுது
என் பேத்திக்கு அல்லது
அவள் மகளுக்கு
துணைஒன்று
கிடைத்த பொழுது
ஒரு நாள் திரும்பிவிடுவேன்
என் கிராமத்துக்கு
Monday, 17 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment