Wednesday, 2 December 2009

உட்கடல்


இந்த அலைகள்
கரை எதையும் தொடுவதில்லை
தன்னுள்ளே சுழன்று சுழன்று

எந்த நதியின் நன்னீரும்
இந்த அலைகளைத் தழுவியதில்லை
தன் உப்பே போதுமென


மழை விழுந்தால் குடித்துவிடும்.
இல்லையெனில், காத்திருக்கும்
அந்நீரும் தன்னீரென்றறிந்து

No comments:

Post a Comment