Saturday, 5 September 2009


நான் குழந்தையாக
இருந்த பொழுது கடவுள்
நல்லவராகத்தான் இருந்தார்.
கேட்டதைக் கொடுத்ததில்லை
என்றாலும்
என்னுடன் கண்ணாமூச்சி ஆடினார்.
தாலாட்டுப் பாடினார்
இன்னொரு கடவுளிடம்
எனக்காகத் தவமிருந்தார்
என்னுடனே இருந்தார்
எப்போதும்

நான் பெரியவனாகியதும்
கோவிலும், பூசாரியும்,
மாலையும் மஞ்சளும்,
தங்கமும் பட்டும்,
ஆளும் மேளமும்
வேண்டுமாம் அவருக்கு
என்னிடமில்லை இவை எதுவும்
அவர் அங்கே
நான் இங்கே

No comments:

Post a Comment