Monday, 7 September 2009

நானும் கனவானேன்

கடற்கரை மணலில் பலர்
கட்டிவைத்த சிற்பங்களை
உடைத்துக் கொண்டிருந்தேன்
மணல் மணல் என்று

கலைடாஸ்கொப்பை
உருட்டி உருட்டிக் காணும்
கனவுகளைச் சிதைத்தேன்
கண்ணாடித் துகள்கள் என்று

கலைந்தெழுந்தன
புதிய கனவுகள்
நானும் மணலில் புழுதியாய்
சிற்பத்தில் இறுகினேன்
உடைந்த கண்ணாடித் துகளாய்
புரண்டெழுகிறேன்

No comments:

Post a Comment