நானும் கனவானேன்
கடற்கரை மணலில் பலர்
கட்டிவைத்த சிற்பங்களை
உடைத்துக் கொண்டிருந்தேன்
மணல் மணல் என்று
கலைடாஸ்கொப்பை
உருட்டி உருட்டிக் காணும்
கனவுகளைச் சிதைத்தேன்
கண்ணாடித் துகள்கள் என்று
கலைந்தெழுந்தன
புதிய கனவுகள்
நானும் மணலில் புழுதியாய்
சிற்பத்தில் இறுகினேன்
உடைந்த கண்ணாடித் துகளாய்
புரண்டெழுகிறேன்
Monday, 7 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment