Thursday, 17 September 2009

இருள்மூடி இருள்மூடி கிடந்த நாட்டில்


எந்தஒரு விடிவுமினி வாரா தென்றே


அருள்கூறும் ஆண்டவரின் வார்த்தை எல்லாம்


அமெரிக்க டாலரினால் மாறு தண்ணே


சேரியிலிருந் தொருவன் சி காகோ சென்றான்


சீனப்பெண் காதலிலே ஒருவன் வீழ்ந்தான்


மாறிவரும் கம்ப்யூட்டர் யுகத்தில் பூமி


மாறுகிற வேகத்தை யாரே சொல்வார்?


கணிணிகளில் அலைஅலையாய் தேனிக் கூட்டம்


கவர்ச்சிகர வடிவங்கள் கருத்தின் ஏற்றம்


பணிபுரியும் இடங்களிலே காதல் பாட்டும்


பதிவெழுதும் கணங்களிலே பாயும் ஊற்றும்


அணியணியாய் கிளம்புகிற புதிய காற்றும்


அதனூடே இலக்கியத்தின் பழைய நாற்றம்


பிணிபோலச் சினிமாவின் பின்னால் தேட்டம்


பிறகென்ன கொடைபோல காட்சிக் கூடம்


தமிழ்ப்பெண்கள் தைரியமாய் பேசக் கண்டேன்


தலைமைக்குப் பக்கமவர் வருதல் கண்டேன்


குமிழ்சிரிப்பும் கும்மாளம் போடல் கண்டேன்


குவலையந்தான் மாறுவதை இங்கே கண்டேன்


உமிபோல பழம்கெடுதல் ஊதல் கண்டேன்


உற்சாகம் கொண்டேநான் பாடு கின்றேன்


இமையாமல் வியக்கின்றேன் பஞ்சாங் கங்கள்


இனிமாறா விட்டாலும் எல்லாம் மாறும்

No comments:

Post a Comment