Tuesday, 15 September 2009
இருந்த வீடு
காலி செய்ததும்
அன்னியமாகி விட்டது
தேடித் தேடி
அருகில் சென்றாலும்
புன்னகைப்பதில்லை
இருந்த நகரத்து
வீதிகளும் கண்டுகொள்வதில்லை
நினைவுக் கானலில்
அலையும் மானென
மனம்
முதற்குரலின்றி
எதிரொலிக்கும் பாடல்கள்
புன்னகைக்கும் முகங்கள்
தொலைபேசிக் குரல்கள்
தோண்டியெடுத்துவிடும்
தங்கச் சுரங்கங்களை
ஆனாலும்
இன்று வருவதில்லை
நேற்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment