Wednesday, 3 February 2010

நகரத்தின் வழியே

உருகி வழியும் தார் ரோடுகளில்
அடித்த வெய்யிலை
நிறையப்பேர் கோட்டிலும், டையிலும்
பிடித்துக் கொண்டனர்

லோடு இழுக்கும் தொழிலாளருடன்
நடந்து போகும் பள்ளிச் சிறுமியின் முதுகில்
கல்வியின் தரம் எலும்பை ஒடித்தது

கண்ணாடிப் புடவை கட்டிய
மேய்ப்பர்க் கூலிகள் நெடிதுயர்ந்து அழைக்கின்றன
இன்னும் பல ஆடுகளை
பரமண்டலத்தின் ஒத்திகையாக
புகைமண்டலம் வாகனங்கள் உபயம்

காலையில்
தள்ளாடித் தள்ளாடிக்
கீரை விற்கவரும்
எழுபது வயதுக் கிழவரின் குரலில் தெறிப்பது
மனிதாபிமானமற்ற தேசத்தின்
மரணஓலம்.

No comments:

Post a Comment