Wednesday, 3 February 2010

சாக்கடை இனம்

சென்னையின் கூவம் புறப்பட்டு விட்டது

திருப்பூர் நொய்யலைத் தொட்டு விட்டது
திருச்சியில் காவிரியைத் தந்தியாய்த் தொட்டது
வைகைக் கரையில் மாளிகை கட்டுது
தாமிர பரணிக்குத் தூது விட்டது
தென்காசி அம்பையைத் தேடுகின்றது

மொகஞ்சோ தாராவில் சாக்கடை கட்டிய
திராவிட இனத்தில்
ஊருக்கு ஊர் சாக்கடை கட்டும் திட்டமில்லை
சிங்காரப் பூங்காக்கள் அங்கங்கே சுருட்டச்
சிவில் இஞ்ஜினீயர் உண்டு
அவர்க்குச் செம்மொழி அறிவும் உண்டு

No comments:

Post a Comment