Wednesday, 3 February 2010

அக்காவின் கேள்விகள்

முள்ளின் வடித்தது அக்காவின் சிலை
இறந்த போது அழக்கூட
அம்மாவோ அப்பாவோ அண்ணனோ இல்லை
அப்பா கொடுத்தனுப்பிய உள்ளத்தின் இருள்
வீட்டில் குடியிருந்தது

என் மனதில் இருக்கும் அக்காவின் கேள்விகள்
அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால்
ஏன் பெற்றாய் என்னையும் எனக்கு முன்
ஐந்து பேரையும் ?

சும்மா வந்து சுண்ணாம்பு தேய்க்க
தெருவில் இருக்கும் கல்லா நான்?

பதில் சொல்ல அப்பா இல்லை
அம்மா இல்லை
கடவுளும் இல்லை
யாரேனும் உண்டோ?

No comments:

Post a Comment