எந்த நாளும் எனக்குரியதல்ல
ஏற்கனவே எழுதப்பட்ட வரிகள்
இருக்கின்றன நான் வாசிக்க
இசையமைத்து வைத்திருக்கிறார்கள்
நான் பாடும் பாடலை
கனவுகளில் வருகின்றன
துன்புறுத்தும் இழப்பின் கணங்கள்
தூக்கமும் எனக்குரியதல்ல
சுவற்றின் நடுவில் பதுக்கிச்
சிமெண்ட் பூசப்பட்ட செங்கல் நான்
வெளியேறிப் பார்த்தால்
என்னையே எனக்கு
அடையாளம் தெரியாது
கனவில் வாசலிலே
காத்திருக்கும் கற்பனையே
நீயும் எனக்கல்ல..
Wednesday, 3 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment