Wednesday, 3 February 2010

எந்த நாளும் எனக்குரியதல்ல
ஏற்கனவே எழுதப்பட்ட வரிகள்
இருக்கின்றன நான் வாசிக்க
இசையமைத்து வைத்திருக்கிறார்கள்
நான் பாடும் பாடலை

கனவுகளில் வருகின்றன
துன்புறுத்தும் இழப்பின் கணங்கள்
தூக்கமும் எனக்குரியதல்ல
சுவற்றின் நடுவில் பதுக்கிச்
சிமெண்ட் பூசப்பட்ட செங்கல் நான்
வெளியேறிப் பார்த்தால்
என்னையே எனக்கு
அடையாளம் தெரியாது

கனவில் வாசலிலே
காத்திருக்கும் கற்பனையே
நீயும் எனக்கல்ல..

No comments:

Post a Comment