Tuesday, 9 February 2010

பாரா முகம்

குடிகாரக் கணவனுக்காக காத்திருக்கும் இரவுகளில்
பல்லியின் மொழி புரிந்து விடுகிறது

எதிர்வீட்டுத் திரைச்சீலை
காற்றில் படபடக்க
குழந்தையின் அழுகுரலும்
அதைத் தேற்றும் ஆண்குரலும்..

மழைபொழியும் இரவுகளில்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும் வாய்ப்புண்டு

நனைந்து தெளிந்து விட்டதென
வீட்டுக்கும் கொண்டு வந்து
சேவு, மிக்ஸர் கேட்பதும் உண்டு

வாசற்படி நிலைக்குமேல்
புன்னகைக்கும் புகைப்படக் குழந்தை
அவளைப் பார்த்தே சிரிக்கிறது

அவன் ஒருநாளும்
பார்த்ததில்லை அதை

No comments:

Post a Comment