Wednesday, 3 February 2010

பொழுதைப் போக்குதல்

வார்த்தைகளில் நடந்தேறிய
புரட்சிகளில்
மடங்கி விழுந்தது மனிதாபிமானம்

வரிகளில் சிந்திய ரத்தத்தில்
உடலிலிருந்து வெளியேறியது
சுரணை

நடனமாடும் எல்லாச் சிலைகளிலும்
உயிரைத் தேடி
களைத்துப் போனது ஏழ்மை

யாரும் பார்க்க விரும்பவில்லை
வதையை
பொழுது போக்கவேண்டுமாம்
பூமியில்

No comments:

Post a Comment