கழுத்தில் தேக்கிக் கொண்டான்
விஷத்தைச் சிவபெருமான்
நானோ பொடியன்
உலகிலிருக்கும் துக்கங்களையெல்லாம்
உறிஞ்சி நெஞ்சில் வைத்தேன்
மேலோர் கொஞ்சம் கொஞ்சமாக
கொடுத்த நஞ்சை
துப்ப முயன்றேன் முடியவில்லை
உடலெல்லாம் பரவிவிட்டது
மனதை எவ்வளவு தான் வெளுத்தாலும்
மற்றவர்களுக்கு என்னில்
நீலம் பாரித்த நஞ்சே தெரிகிறது
அவர்களும் நஞ்சையே உண்டவர்கள்
கண்களிலும் நஞ்சையே கொண்டவர்கள்
நஞ்சுண்டவன் நாட்டில்
தஞ்சம் கொண்டால்
மிஞ்சுவது எது?
Saturday, 30 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment