Saturday, 30 January 2010

நஞ்சுண்டன் நாடு

கழுத்தில் தேக்கிக் கொண்டான்
விஷத்தைச் சிவபெருமான்
நானோ பொடியன்
உலகிலிருக்கும் துக்கங்களையெல்லாம்
உறிஞ்சி நெஞ்சில் வைத்தேன்
மேலோர் கொஞ்சம் கொஞ்சமாக
கொடுத்த நஞ்சை
துப்ப முயன்றேன் முடியவில்லை
உடலெல்லாம் பரவிவிட்டது
மனதை எவ்வளவு தான் வெளுத்தாலும்
மற்றவர்களுக்கு என்னில்
நீலம் பாரித்த நஞ்சே தெரிகிறது
அவர்களும் நஞ்சையே உண்டவர்கள்
கண்களிலும் நஞ்சையே கொண்டவர்கள்
நஞ்சுண்டவன் நாட்டில்
தஞ்சம் கொண்டால்
மிஞ்சுவது எது?

No comments:

Post a Comment