Tuesday, 16 February 2010

வராத காகம்

இன்று வரவில்லை

என் வீட்டுக்கு
எப்போதும் வரும் காகம்

சோற்றுப் பருக்கைகள் காத்திருக்கின்றன சுவர் மீது
மனைவியும் அடிக்கடி பார்த்தாள்

திரும்பாமலே சென்றுவிடக்கூடும்
வருந்தாமலே வாழக் கற்றவை

ஆத்மாக்களைச் சுமந்தே
கருகிவிட்ட பறவைகள்
சேர்த்த பாவங்களை மின்கம்பிகளில் துடைக்க முயலும் போது
வெடிக்கின்றன

காகங்கள் கூடிக் கத்துகின்றன
உள்ளிருப்பது மனிதக் குரலென்றோ…

1 comment:

  1. Your Blog continues to amaze me..:)

    This is Sivaramachandran...how're you Sir?.. longtime..!,Please send me your contact number and address details to my mail ID..(ssschandran@yahoo.co.in)...

    ReplyDelete