இன்று வரவில்லை
என் வீட்டுக்கு
எப்போதும் வரும் காகம்
சோற்றுப் பருக்கைகள் காத்திருக்கின்றன சுவர் மீது
மனைவியும் அடிக்கடி பார்த்தாள்
திரும்பாமலே சென்றுவிடக்கூடும்
வருந்தாமலே வாழக் கற்றவை
ஆத்மாக்களைச் சுமந்தே
கருகிவிட்ட பறவைகள்
சேர்த்த பாவங்களை மின்கம்பிகளில் துடைக்க முயலும் போது
வெடிக்கின்றன
காகங்கள் கூடிக் கத்துகின்றன
உள்ளிருப்பது மனிதக் குரலென்றோ…
Tuesday, 16 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
Your Blog continues to amaze me..:)
ReplyDeleteThis is Sivaramachandran...how're you Sir?.. longtime..!,Please send me your contact number and address details to my mail ID..(ssschandran@yahoo.co.in)...