நண்பனின் வீட்டைக் கடக்கும் போது
நண்பனின் வீட்டைக் கடக்கும்போது
அங்கிருந்த தோட்டத்துப் பூக்களின்
மணம் வருகிறது
பூக்களை கோர்த்துக் கோர்த்து
அவன் அக்கா செய்த
பூமாலையின் நிறங்கள்
கண்ணில் எதிரொளிக்கின்றன
உள்புற வாசலில் வாடாமல்லி மட்டும்
இன்னும் இருக்கிறது
ஏதோ கோஷத்தை நம்பி
போலிசிடம் அவன் வாங்கிய அடிகள், தழும்புகள்
யாராவது அடி வாங்கும் போது ஞாபகம் வருகின்றன
என்னைப் போல் ஒரு கோழையை அவன்
ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாது
நடுகல் அல்லது
நாற்றமடிக்கும் பழையகுளம்
என் நண்பன் எதுவாக இருக்கக் கூடும்?
Monday, 4 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment