Monday, 4 January 2010

நண்பனின் வீட்டைக் கடக்கும் போது


நண்பனின் வீட்டைக் கடக்கும்போது
அங்கிருந்த தோட்டத்துப் பூக்களின்
மணம் வருகிறது
பூக்களை கோர்த்துக் கோர்த்து
அவன் அக்கா செய்த
பூமாலையின் நிறங்கள்
கண்ணில் எதிரொளிக்கின்றன

உள்புற வாசலில் வாடாமல்லி மட்டும்
இன்னும் இருக்கிறது

ஏதோ கோஷத்தை நம்பி
போலிசிடம் அவன் வாங்கிய அடிகள், தழும்புகள்
யாராவது அடி வாங்கும் போது ஞாபகம் வருகின்றன
என்னைப் போல் ஒரு கோழையை அவன்
ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாது

நடுகல் அல்லது
நாற்றமடிக்கும் பழையகுளம்
என் நண்பன் எதுவாக இருக்கக் கூடும்?

No comments:

Post a Comment