Monday, 4 January 2010

பெருங்காட்சி


வண்ணங்களையும்
காட்சிகளையும் உறிஞ்சிவிடும்
மரணக் கதிரின்
பேரொளி
அதனொளியில்
வாழ்வும் சாதனையும்
தாழ்வும் வேதனையும்
இன்னும் பலவும்
ஒன்றாகவே தோன்றும்

பெரிதினும் பெரியதாய்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லையற்ற பெருவெளி
அதன் விரிவில்
பெரியதும் சிறியதும்
அரியதும்
இன்னும் பலவும்
ஒன்றாகவே வரிசையில் மறையும்

எதுவும் யாரும் இருந்ததா?
என்பதே மிஞ்சும் கேள்வியாய்…

No comments:

Post a Comment