பெருங்காட்சி
வண்ணங்களையும்
காட்சிகளையும் உறிஞ்சிவிடும்
மரணக் கதிரின்
பேரொளி
அதனொளியில்
வாழ்வும் சாதனையும்
தாழ்வும் வேதனையும்
இன்னும் பலவும்
ஒன்றாகவே தோன்றும்
பெரிதினும் பெரியதாய்
எங்கும் நிறைந்திருக்கும்
எல்லையற்ற பெருவெளி
அதன் விரிவில்
பெரியதும் சிறியதும்
அரியதும்
இன்னும் பலவும்
ஒன்றாகவே வரிசையில் மறையும்
எதுவும் யாரும் இருந்ததா?
என்பதே மிஞ்சும் கேள்வியாய்…
Monday, 4 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment