தவளையும் கற்கும்
பாம்புக்குப் பயந்து
படியேறி வெளிவந்து
இருட்டைப் பார்க்கும்
ஒரு கிணற்றுத் தவளை
வயல்வெளிக்குள்ளே
பாம்புகள் ஆயிரம் கண்டு
நீரிலும் நிலத்திலும்
தத்தித் தாவியது
கற்றுக் கொண்டுவிட்டது
கத்துவதெப்போதென்பதையும்
பாம்பின் உரித்த சட்டைகளுக்குள்
ஒளிந்து கொள்வதையும்
எங்கோ ஒரு பாம்பு
தனக்காகக் காத்திருப்பதையும்
Friday, 8 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment