Friday, 8 January 2010

தவளையும் கற்கும்


பாம்புக்குப் பயந்து
படியேறி வெளிவந்து
இருட்டைப் பார்க்கும்
ஒரு கிணற்றுத் தவளை

வயல்வெளிக்குள்ளே
பாம்புகள் ஆயிரம் கண்டு
நீரிலும் நிலத்திலும்
தத்தித் தாவியது

கற்றுக் கொண்டுவிட்டது
கத்துவதெப்போதென்பதையும்
பாம்பின் உரித்த சட்டைகளுக்குள்
ஒளிந்து கொள்வதையும்

எங்கோ ஒரு பாம்பு
தனக்காகக் காத்திருப்பதையும்

 

No comments:

Post a Comment