Tuesday, 5 January 2010

எப்போதோ?


தண்ணொளியின் மென்னணைப்பில்
நான் மயங்க
யாரும் காணாமல்
என்னருகில் வாராமல்
இருபத்தி நான்காவது மாடிக்கு மேல்
என்னைத் தேடி நிற்கும்
வீறிட்டெழும் கூச்சலில்
வீட்டில் நான் நுழைய
வினாடியில் கலங்கிவிடும்
நிலவின் முகம்

இன்னும் சந்திக்கவில்லை
அந்த முழுநிலவை

 
 

No comments:

Post a Comment