எப்போதோ?
தண்ணொளியின் மென்னணைப்பில்
நான் மயங்க
யாரும் காணாமல்
என்னருகில் வாராமல்
இருபத்தி நான்காவது மாடிக்கு மேல்
என்னைத் தேடி நிற்கும்
வீறிட்டெழும் கூச்சலில்
வீட்டில் நான் நுழைய
வினாடியில் கலங்கிவிடும்
நிலவின் முகம்
இன்னும் சந்திக்கவில்லை
அந்த முழுநிலவை
Tuesday, 5 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment