Wednesday, 20 January 2010

காணாதது


சில நேரம் பாய்ந்து செல்லும்
சிலநேரம் மனம்கனத்து நகரும்
சிலநேரம் கோடாகிச் செல்லும்
தண்ணீரைப் பார்த்து
சொல்லிக் கொண்டிருக்கும்
நதிக்கரையோரத்துப்
பாறாங்கல் ஒன்று
“எப்போதும் ஓடும் தண்ணீர் இதுவே”

பாறாங்கல்லில் மோதி உராய்ந்து
ஓடிக் கொண்டிருக்கும்
தண்ணீர்
வழியெல்லாம் சொல்லும்
“எப்போதும் நிற்கும் கல் இதுவே”

No comments:

Post a Comment