தேசம் என்பது
பூமியின் மீது கோடுகளல்ல
தேசம் என்பது மண்ணுக்குள் இருந்து தோண்டும்
நீரல்ல
தேசம் என்பது மனதின் மீது வரைந்த வரைபடம்
தேசம் என்பது மொழியில் செதுக்கிய மெழுகுச்சிலை
தேசம் என்பது ஜனங்களுகிடையே
பாயும் ரகஸிய நதி
கொலைகாரர்களுக்கு எதிரான கவிதை
அடக்குமுறைக்கு எதிரான கொடி
விண்வெளியில் இருவர் சேர்ந்தாலும்
கடலுள்ளே மறைந்தாலும்
நினைவை நிரப்பும் காற்று
எளிதில் வெட்டப்படும் செடி
எப்படியும் எழுந்துவிடும்
கண்ணில்படாத பாறை…
தேசம் என்பது……
Tuesday, 5 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment