Tuesday, 5 January 2010

தேசம் என்பது

பூமியின் மீது கோடுகளல்ல

தேசம் என்பது மண்ணுக்குள் இருந்து தோண்டும்
நீரல்ல

தேசம் என்பது மனதின் மீது வரைந்த வரைபடம்

தேசம் என்பது மொழியில் செதுக்கிய மெழுகுச்சிலை

தேசம் என்பது ஜனங்களுகிடையே
பாயும் ரகஸிய நதி

கொலைகாரர்களுக்கு எதிரான கவிதை

அடக்குமுறைக்கு எதிரான கொடி

விண்வெளியில் இருவர் சேர்ந்தாலும்
கடலுள்ளே மறைந்தாலும்
நினைவை நிரப்பும் காற்று

எளிதில் வெட்டப்படும் செடி

எப்படியும் எழுந்துவிடும்
கண்ணில்படாத பாறை…

தேசம் என்பது……

 
 
 

No comments:

Post a Comment