Monday, 4 January 2010

என்னைத் தொடாதே


வான் கொடுத்துப்,
பூமி தள்ளிவிட,
நதி போராடித்தான் பார்க்கிறது
வளைந்தும் நெளிந்தும்
நுழைந்தும்
மனிதர்களை அடைந்துவிட


ஆடுகள்


கண்கள் பார்க்காதது போல்
இருந்துவிடுவோம்
காதுகள் கேட்காதது போல்
வாய்கள் பேசாததுபோல்
நடித்துவிடுவோம்

மேய்ப்பர்கள்
புல்விரும்பும் மந்தைகளைத் தானே
விரும்புகிறார்கள்

No comments:

Post a Comment