முட நகரம்
மாளிகைகளின் வரிசைகள்
வான்தொட பின்புறத்தில்
நிலத்தில் நிற்க வலுவின்றித்
தடுமாறும் குடிசைகள்
மாநகரின் சாலைகளின்
தெரிவதில்லை
கார்க் கண்ணாடிகளின்,
விலையுயர்ந்த
அழகு
மூக்குக் கண்ணாடிகளின்
கறுப்புத் திரைகளின் வழியே
பார்க்க விரும்புவதும் இல்லை
அதனால் இல்லாததாகிவிட்டது
தன்னை முடமாக்கிக் கொண்டு
தங்கக் கீரீடம் சூட்டி
மினுக்குகிறது மாநகரம்.
Wednesday, 2 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment