Wednesday, 2 December 2009

முட நகரம்




மாளிகைகளின் வரிசைகள்
வான்தொட பின்புறத்தில்
நிலத்தில் நிற்க வலுவின்றித்
தடுமாறும் குடிசைகள்

மாநகரின் சாலைகளின்
தெரிவதில்லை

கார்க் கண்ணாடிகளின்,
விலையுயர்ந்த
அழகு
மூக்குக் கண்ணாடிகளின்
கறுப்புத் திரைகளின் வழியே

பார்க்க விரும்புவதும் இல்லை
அதனால் இல்லாததாகிவிட்டது

தன்னை முடமாக்கிக் கொண்டு
தங்கக் கீரீடம் சூட்டி
மினுக்குகிறது மாநகரம்.

No comments:

Post a Comment