Saturday, 19 December 2009

ஒளிரும் வார்த்தைகள்


வார்த்தைகளின் நடனத்தில்
உயிர் எழுகிறது
அது உயரங்களிலும்
பள்ளங்களிலும்
உருண்டோடுகிறது

இந்த வார்த்தைகள் தானே
அகராதியில்
புதையுண்டிருந்தன
அடிமைகளின் வீடுகளில்
தூங்கிக் கொண்டிருந்தன
எஜமானர்களின் காலை
நக்கிக் கொண்டிருந்தன

அவனிடம் மட்டும்
தீயாக எப்படி எழுந்தன?

No comments:

Post a Comment