ஒளிரும் வார்த்தைகள்
வார்த்தைகளின் நடனத்தில்
உயிர் எழுகிறது
அது உயரங்களிலும்
பள்ளங்களிலும்
உருண்டோடுகிறது
இந்த வார்த்தைகள் தானே
அகராதியில்
புதையுண்டிருந்தன
அடிமைகளின் வீடுகளில்
தூங்கிக் கொண்டிருந்தன
எஜமானர்களின் காலை
நக்கிக் கொண்டிருந்தன
அவனிடம் மட்டும்
தீயாக எப்படி எழுந்தன?
Saturday, 19 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment