Saturday, 19 December 2009

தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி


என் அப்பாவுக்கு
எல்லாம் தெரியும்
அவர் கண்டுபிடித்த சூத்திரங்கள்
மிக எளிமையானவை
விரைவில் விடைகிடைக்கும்

கருவுற்றதும், கல்வி கற்றதும்,
காளையானதும் வேலைவந்ததும்
எல்லாம் அவர் செயல்

காதலிப்பதும், பிள்ளைபெறுவதும்,
காரில் போவதும் சோபாவில் அமர்வதும்
பெண்டாட்டியை அடக்குவதும்
அவருக்காக நான் செய்வது

உலகமே அவருடையதுதான்
அவரே மீண்டும் பிறந்தேனா?

 
 

No comments:

Post a Comment