தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி
என் அப்பாவுக்கு
எல்லாம் தெரியும்
அவர் கண்டுபிடித்த சூத்திரங்கள்
மிக எளிமையானவை
விரைவில் விடைகிடைக்கும்
கருவுற்றதும், கல்வி கற்றதும்,
காளையானதும் வேலைவந்ததும்
எல்லாம் அவர் செயல்
காதலிப்பதும், பிள்ளைபெறுவதும்,
காரில் போவதும் சோபாவில் அமர்வதும்
பெண்டாட்டியை அடக்குவதும்
அவருக்காக நான் செய்வது
உலகமே அவருடையதுதான்
அவரே மீண்டும் பிறந்தேனா?
Saturday, 19 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment