Saturday, 26 December 2009

பகிர்தல்

நான் என் இதயத்தைக்
கையில் எடுத்துக் கொண்டு
கூவிக்கூவி அழைக்கிறேன்
யார்கேட்டாலும் பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்

கவிதையென்றோ உளறல் என்றோ
காதலென்றோ வேறு என்னவென்றோ
பெயர் வைத்துக் கொள்ளலாம்
இழுத்து இழுத்துச் சொருகிக் கொள்ளும்
எல்லா வரையறைகளையும் தாண்டி

நீ செய்தது எல்லாம் சரியாகவே இருக்கட்டும்
நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்
அதனாலெல்லாம் என்னவாகிவிடப் போகிறது?

நான் மோசமாகவோ
நீ புண்ணியவானாகவோ இருக்கலாம்
காற்றோ எதுவோ இருக்கிறதே
நாம் பகிர்ந்து கொள்ள

No comments:

Post a Comment