பகிர்தல்
நான் என் இதயத்தைக்
கையில் எடுத்துக் கொண்டு
கூவிக்கூவி அழைக்கிறேன்
யார்கேட்டாலும் பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்
கவிதையென்றோ உளறல் என்றோ
காதலென்றோ வேறு என்னவென்றோ
பெயர் வைத்துக் கொள்ளலாம்
இழுத்து இழுத்துச் சொருகிக் கொள்ளும்
எல்லா வரையறைகளையும் தாண்டி
நீ செய்தது எல்லாம் சரியாகவே இருக்கட்டும்
நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்
அதனாலெல்லாம் என்னவாகிவிடப் போகிறது?
நான் மோசமாகவோ
நீ புண்ணியவானாகவோ இருக்கலாம்
காற்றோ எதுவோ இருக்கிறதே
நாம் பகிர்ந்து கொள்ள
Saturday, 26 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment