பெண்ணின் துயர்
வாசிக்கப் படாத
அவளது வரிகள் காத்திருக்கின்றன
மனதில் ஒரு பெருந்தேராக
சின்னக் குழந்தையின்
சிரிப்பு அல்லது
கணவனின் நேசக்குரல்
எப்போதாவது கசியவிடும்
கண்ணீரில்
கொஞ்சம் வழுக்கி நகரும்
அலைந்து புரண்டு கொண்டிருக்கும்
நிலத்தடித் தணலின்
ஊற்றுக் கண்
திறந்தால்
தேரும் நகர்ந்துவிடும்
உலகும் எரிந்துவிடும்
என்றே
ஒருபோதும் திறவாதோ?
Wednesday, 30 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment