Wednesday, 30 December 2009

பெண்ணின் துயர்


வாசிக்கப் படாத
அவளது வரிகள் காத்திருக்கின்றன
மனதில் ஒரு பெருந்தேராக

சின்னக் குழந்தையின்
சிரிப்பு அல்லது
கணவனின் நேசக்குரல்
எப்போதாவது கசியவிடும்
கண்ணீரில்
கொஞ்சம் வழுக்கி நகரும்

அலைந்து புரண்டு கொண்டிருக்கும்
நிலத்தடித் தணலின்
ஊற்றுக் கண்
திறந்தால்
தேரும் நகர்ந்துவிடும்
உலகும் எரிந்துவிடும்
என்றே
ஒருபோதும் திறவாதோ?

 
 
 

No comments:

Post a Comment