Tuesday, 22 December 2009

தொலைந்த வரி

வாசிக்கப்படாத கவிதைகள்
என்னவாகின்றன?

யாருக்கும் தெரியாமல்
ஆழ்கடலில் பூக்கும் ‘கோரல் ரீஃப்’
போல் ஆழ்ந்துவிடும்
பின்
அழுகிக் கெட்டுக் காய்ந்த
பிணங்களைப் போலாகிவிடும்

நிலத்தடியில் மறைந்துபோகும்
வேர்கள்
சிலநேரம் துளிர்விடக்கூடும்
அடுத்த தலைமுறையின் நினைவுகளில்

No comments:

Post a Comment