வறண்ட பாலைவனத்தின்
நீரற்ற பரப்பின் மீது
கிளைவிரித்துப் பரவும்
முட்செடி
அதன் கையலப் பட்டை இலையில்
விஷ முள்ளின் கீழே
ஒளிந்திருக்கும்
எப்போதோ வான்போட்ட
ஒரு பிச்சைக் காசென
இரு துளி ஈரம்
அதைத் தோண்டி எடுக்க
எத்தனிக்கும் வேறு வழியற்ற
எறும்பு
யாராவது வருவான்
உன்னையும் தேடி
Saturday, 26 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment