Saturday, 26 December 2009

வறண்ட பாலைவனத்தின்
நீரற்ற பரப்பின் மீது
கிளைவிரித்துப் பரவும்
முட்செடி
அதன் கையலப் பட்டை இலையில்
விஷ முள்ளின் கீழே
ஒளிந்திருக்கும்
எப்போதோ வான்போட்ட
ஒரு பிச்சைக் காசென
இரு துளி ஈரம்
அதைத் தோண்டி எடுக்க
எத்தனிக்கும் வேறு வழியற்ற
எறும்பு
யாராவது வருவான்
உன்னையும் தேடி

No comments:

Post a Comment