Monday, 21 December 2009

ஊர்மணம்

மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியல்ல
மெல்ல தழுவிச் செல்லும் தென்றல் காற்றல்ல
நான் தினமும் பறித்துண்ணும் செம்பருத்தி மொக்கல்ல
சின்ன உறைக்கிணற்றின் உப்புத் தண்ணீரல்ல
வெள்ளிநுரை சுருண்டுவரும் கடல் அலையல்ல
காலையில் பனையோலையில் கிடைக்கும் பதனீரல்ல
ஓட்டைச் சிப்பியோ, கடற்கரைக் கரும்பொன்னோ
நடக்கக் கால்வலிக்கும் மணலோ அல்ல
அது வெற்று வார்த்தையுமல்ல, நிழலுமல்ல
எப்படிச் சொல்வேன் என் நகரத்து மகளிடம்?
உதற முடியாமல் என்னைத் தொடர்ந்துவரும்,
எல்லாம் சொன்ன பின்னும் நழுவிச் செல்லும்,
அதை

No comments:

Post a Comment