ஊர்மணம்
மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியல்ல
மெல்ல தழுவிச் செல்லும் தென்றல் காற்றல்ல
நான் தினமும் பறித்துண்ணும் செம்பருத்தி மொக்கல்ல
சின்ன உறைக்கிணற்றின் உப்புத் தண்ணீரல்ல
வெள்ளிநுரை சுருண்டுவரும் கடல் அலையல்ல
காலையில் பனையோலையில் கிடைக்கும் பதனீரல்ல
ஓட்டைச் சிப்பியோ, கடற்கரைக் கரும்பொன்னோ
நடக்கக் கால்வலிக்கும் மணலோ அல்ல
அது வெற்று வார்த்தையுமல்ல, நிழலுமல்ல
எப்படிச் சொல்வேன் என் நகரத்து மகளிடம்?
உதற முடியாமல் என்னைத் தொடர்ந்துவரும்,
எல்லாம் சொன்ன பின்னும் நழுவிச் செல்லும்,
அதை
Monday, 21 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment