நகையெனப் படுவது யாதெனின்
இறுக்கப்பட்ட பழக்கங்களின் பெட்டியில்
பிணமாகக் கிடக்கிறது மகிழ்ச்சி
பதுக்கப்பட்ட தங்கம் போல
பார்த்துப் பாதுகாத்து
ரகஸியமாக அனுபவிக்கிறது
சுயநலம்
ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பார்த்துப்
புன்னகைக்க மறுக்கும் மனிதர்கள்
வீட்டுக்குள்
புரண்டு புரண்டு சிரிக்கிறார்கள்
பைத்தியக்காரர்களைப் போல
செதுக்கப்பட்ட சூத்திரங்கள்
அரங்கேறும் காலம்
சிரிப்புக்கான தருணங்களை
திரும்பியும் பார்ப்பதில்லை
அமுத சுரபியை யாரும்
சீண்டுவதில்லை
Tuesday, 8 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment