Tuesday, 8 December 2009

நகையெனப் படுவது யாதெனின்


இறுக்கப்பட்ட பழக்கங்களின் பெட்டியில்
பிணமாகக் கிடக்கிறது மகிழ்ச்சி
பதுக்கப்பட்ட தங்கம் போல
பார்த்துப் பாதுகாத்து
ரகஸியமாக அனுபவிக்கிறது
சுயநலம்

ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பார்த்துப்
புன்னகைக்க மறுக்கும் மனிதர்கள்
வீட்டுக்குள்
புரண்டு புரண்டு சிரிக்கிறார்கள்
பைத்தியக்காரர்களைப் போல

செதுக்கப்பட்ட சூத்திரங்கள்
அரங்கேறும் காலம்
சிரிப்புக்கான தருணங்களை
திரும்பியும் பார்ப்பதில்லை
அமுத சுரபியை யாரும்
சீண்டுவதில்லை

No comments:

Post a Comment