விடை பெற்றுவிட்டோம் தோழர்களே
இனி யாருக்கும் உறுத்தாது
விதி பற்றிப் பேசலாம்
டாலரை அளக்கலாம்
நமக்கினி பயமேது?
கண்களை மூடிவிட்டோம்
காயங்களைப் போதையில்
மிதக்கவிட்டோம்
வலியே தெரியாது
துப்பாக்கி தூக்கிவிட்டோம்
இனி
முனகலும் கேட்காது
தூரத்தில் வானவில்லைக்
காட்டுகிறோம்
இனி இங்கு
வண்ணங்கள் ஒருபோதும் மாறாது
Saturday, 19 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment