Saturday, 19 December 2009

விடை பெற்றுவிட்டோம் தோழர்களே

இனி யாருக்கும் உறுத்தாது
விதி பற்றிப் பேசலாம்
டாலரை அளக்கலாம்
நமக்கினி பயமேது?

கண்களை மூடிவிட்டோம்
காயங்களைப் போதையில்
மிதக்கவிட்டோம்
வலியே தெரியாது

துப்பாக்கி தூக்கிவிட்டோம்
இனி
முனகலும் கேட்காது

தூரத்தில் வானவில்லைக்
காட்டுகிறோம்
இனி இங்கு
வண்ணங்கள் ஒருபோதும் மாறாது

No comments:

Post a Comment