Thursday, 10 December 2009

சட்டை உரித்தல்


ஒருமுறை பிறந்தேன்
பிறந்தபின்
பாம்புச் சட்டை உரிவதுபோல்,
அதன் உரிந்த சட்டையைப் போலவே
நான்
உயிரற்றுப் போய்விடாமலிருக்க
ஒவ்வொரு முறையும்
உரிக்கிறேன் என்னை
கொஞ்ச காலத்தின் பிறகு
மூச்சடைக்க வைக்கும்
தினசரிச் சாதாரணங்கள்
மாலைகளுடன் காத்திருக்கும்
நமக்காக

ஆனாலும்
இருளோ ஒளியோ
தெரியாத ஏதோ ஒன்று
தேவைப்படுகிறது
மீண்டும் உரித்துக் கொண்டு
தொடர்ந்து செல்ல

No comments:

Post a Comment